Wednesday, November 28, 2012

சிந்திக்காத கோணம்!


 
சமீபத்தில் அறிமுகமான நண்பர் அவர். ’வாங்க ஒரு டீ சாப்பிடுவோம்’ என்றார். டீ முடிந்தவுடன் சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்தார். புன் முறுவலுடன் பார்த்தேன். புரிந்து கொண்டவராக சிரித்தார். ’பீடி குடிச்சு உடம்பை கெடுத்துக்காதீங்க சார். அதுக்கு பதிலா பஞ்சு வெச்ச சிகரெட் குடிக்கலாமில்ல’ என்றேன்.

அதற்கு, ‘இப்படித்தான் தலைவா நாட்டுல கொள்ளபேரு புரளிய கிளப்பி விட்டுருக்கானுங்க. பொதுவா இந்த பீடியோட சைஸ் பாத்தீங்கன்னா ஈர்க்குச்சி மாதிரி சின்னதா இருக்கும். இதுலயும் பாதி பீடி சுருட்டுன இலைதான். மீதி இருக்கிற அந்த தலைப்பகுதிலதான் கொஞ்சம் தூள் இருக்கும். ஆனா நீங்க சொல்ற அந்த பஞ்சு வெச்ச சிகரெட்ல பாத்தீங்கண்ணா அடீல இருந்து நுனி வரைக்கும் தூளா இருக்கும். இது பத்து பீடிக்கு சமம். இப்ப சொல்லுங்க எது கெடுதல் ஜாஸ்தின்னு’ என்றார், சிந்தனையுடன் திரும்பினேன்.

No comments:

Post a Comment