கடந்த 16ம் தேதி இரவு தந்தி
டி.வியில் சினிமா குறித்த நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து
வழங்கிய நங்கை இயக்குனர் பாலுமகேந்திரா ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருத்தை தெரிவித்தார்.
அதன் பின் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பாலுமகேந்திரா பேசிய காட்சி ஒளிபரப்பானது.
அப்போது அவர் முன் விரிந்த எழுத்து பட்டையில் “பழனிபாரதி, பாடலாசிரியர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மீண்டும் ஒரு முறை அதே எழுத்து பட்டை திரையில் ஒளிர்ந்து மறைந்தது. பாலுமகேந்திராவிற்கும்
பழனிபாரதிக்கும் வித்தியாசம் தெரியாதவர்களை வேலைக்கு வைத்து கொள்வது அந்த நிறுவனத்தின்
தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதையெல்லாம் பார்த்து தொலைய வேண்டிய நேயர்களின் நிலையை
என்னவென்று சொல்வது?
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Tuesday, June 18, 2013
Sunday, December 27, 2009
ஒரே ஒரு கேள்வி !
கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சூரியச் செய்தியில் சென்னை மறைமாவட்ட பேராயரின் வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டு அப்படியே வேறு சேனல்களில் மேயத் துவங்கிய போது பொதிகை கண்ணில் பட்டது. அதைச் தாவிச் செல்ல விடாமல் ஹரிஹரனும் லெஸ்லியும் 'கலோனியல் கசின்ஸ்' ஆக 'கிருஷ்ணா நீ பேகனே…' என கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் தேனாய் கலந்து காதில் ஊற்றிய அந்தப் பாடலுக்கு ஒரு ஆண் பரதம் ஆடிக் கொண்டிருந்தார். பெயர் தெரியவில்லை, சுமாராக இருந்தது: ஆனால் நல்ல கற்பனை வளம். அந்தப்பாடல்-நடனக் காட்சி முடிந்தவுடன் பட்டுப் புடவையுடன் ஒரு பாவை தோன்றி, The Next Song, Maathaa… Paraashakthi… is என குயிலாய் கூவினார். அடுத்து ஆங்கிலத்தில் அந்தப் பாடலின் ராகம், தாளம் பற்றிய குறிப்பு அட்டையும் (ஒரே ஒரு வினாடிதான்) காண்பிக்கப்பட்டது. பின் 'மாதா…பராசக்தி…வையமெல்லாம் நிறைந்திருப்பாய்…' என தமிழில் ஒலித்த அந்தப் பாடலுக்கு கொஞ்சம் வயதான ஆணும் பெண்ணும் ஆடத் துவங்கினர். ஆடலும் பாடலும் முடிந்தவுடன் A Dhoordharshan Presnsentation என ஆங்கிலத்தில் எழுத்துப் போட்டார்கள்.
உடனடியாக என்னுள் தோன்றிய கேள்வி, 'உங்கொய்யால, சென்னை என்ன இங்கிலாந்துலயாடா இருக்குது?'
உடனடியாக என்னுள் தோன்றிய கேள்வி, 'உங்கொய்யால, சென்னை என்ன இங்கிலாந்துலயாடா இருக்குது?'
Tuesday, December 22, 2009
வெளங்குமாய்யா!?
சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் சின்னஞ்சிறு கதை ஒன்று படித்தேன். அதில் வேலை விஷயமாக ஒரு வாராம் வெளியூர் செல்ல தயாராகும் கணவன் மனைவியை 'படுக்கைக்கு' அழைக்கிறான். வழக்கமாக 'ஒத்துழைக்கும்' மனைவி அன்று மறுக்கிறாள். அதற்கு அவள் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் காரணம், இன்று அவனுக்கு 'ஒத்துழைத்து' விட்டால் ஆற அமர வேலையை முடித்து விட்டு சரியாக ஒருவாரத்திற்கு பின் தான் வருவானாம். அதனால் இப்போது 'ஒத்துழைப்பு' தராமல் 'பசியோடு' அனுப்பினால்தான் மூன்று, நான்கு நாட்களில் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு 'பசியோடு' பறந்து வருவானாம்.
இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான், 'அந்த வேலையும் கம்பெனியும் வெளங்குமாய்யா?'(இதை மட்டும் திரு. சாலமன்பாப்பையா-வின் மாடுலேஷனில் மறுவாசிப்பு செய்து கொள்ளுங்கள்!)
இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான், 'அந்த வேலையும் கம்பெனியும் வெளங்குமாய்யா?'(இதை மட்டும் திரு. சாலமன்பாப்பையா-வின் மாடுலேஷனில் மறுவாசிப்பு செய்து கொள்ளுங்கள்!)
Monday, December 21, 2009
நல்ல முன்னேற்றம்!
தற்போது டி.வி-யில் வரும் 'ஆக்ஸ் பூஸ்ட்' என்ற பாடிஸ்ப்ரே-வின் விளம்பரத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த திரவியத்தின் வாசனையில் மயங்கிய இளம்வயது பெண் லிப்டில் உடன் வரும் பையனை பலாத்காரம் செய்து விடுகிறாள். மற்றொரு தளத்தில் லிப்ட் நின்றவுடன் அந்தப் பெண் வெளியேறிவிட மீண்டும் அதில் ஏற வரும் நடுத்தர வயது பெண்மணியும் அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்க அத்துடன் அவ்விளம்பரம் முடிந்து விடுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் ஆங்கிலச் சேனல் ஒன்றில் (WB) முதல் பெண் வெளியேறியவுடன் வரும் ஒரு ஆணும் அதற்கடுத்த விளம்பர இடைவேளையில் அறுபது வயது கிழவியுமெல்லாம் வந்து அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்கிறார்கள். நல்ல முன்னேற்றந்தான்! (ஆங்கிலச் சேனலில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு என்பதை நினைவில் கொள்க!)
இதில் விசேஷம் என்னவென்றால் ஆங்கிலச் சேனல் ஒன்றில் (WB) முதல் பெண் வெளியேறியவுடன் வரும் ஒரு ஆணும் அதற்கடுத்த விளம்பர இடைவேளையில் அறுபது வயது கிழவியுமெல்லாம் வந்து அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்கிறார்கள். நல்ல முன்னேற்றந்தான்! (ஆங்கிலச் சேனலில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு என்பதை நினைவில் கொள்க!)
Subscribe to:
Posts (Atom)