Tuesday, December 22, 2009

வெளங்குமாய்யா!?

சமீபத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் சின்னஞ்சிறு கதை ஒன்று படித்தேன். அதில் வேலை விஷயமாக ஒரு வாராம் வெளியூர் செல்ல தயாராகும் கணவன் மனைவியை 'படுக்கைக்கு' அழைக்கிறான். வழக்கமாக 'ஒத்துழைக்கும்' மனைவி அன்று மறுக்கிறாள். அதற்கு அவள் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் காரணம், இன்று அவனுக்கு 'ஒத்துழைத்து' விட்டால் ஆற அமர வேலையை முடித்து விட்டு சரியாக ஒருவாரத்திற்கு பின் தான் வருவானாம். அதனால் இப்போது 'ஒத்துழைப்பு' தராமல் 'பசியோடு' அனுப்பினால்தான் மூன்று, நான்கு நாட்களில் சீக்கிரம் வேலையை முடித்து விட்டு 'பசியோடு' பறந்து வருவானாம்.

இதைப் படித்தவுடன் எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான், 'அந்த வேலையும் கம்பெனியும் வெளங்குமாய்யா?'(இதை மட்டும் திரு. சாலமன்பாப்பையா-வின் மாடுலேஷனில் மறுவாசிப்பு செய்து கொள்ளுங்கள்!)

No comments:

Post a Comment