Monday, January 11, 2010

கொம்பு சீவுதல்!

ஒவ்வொரு வாரமும் குமுதம் வாரஇதழில் "நான் தமிழன்" என்று ஒரு பகுதி வெளிவந்து கொண்டிருக்கிறது.(பெரும்பாலும் படித்துத்திருப்பீர்கள்) இப்பகுதி ஆரம்பித்த உடனேயே 'இப்ப இது தேவையா?' என்ற கேள்வி எழுந்தாலும் ஏதோ 'பழமை, பெருமை, பாரம்பரியம்' பற்றி பேசுகிறார்கள், ஒரு எளிய பதிவாக இருக்கும், என சமாதானம் கூறி மன விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. கடந்த 6-1-2010 தேதியிட்ட இதழில் 'வணிக வைசியர்' குறித்து எழுதியிருந்தார்கள். அதில், 'விஜயநகர ஆட்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தால் இவர்கள் இடம்பெயரும்போது ஒரு குறிப்பிட்ட இடங்களில் குடியேறாமல், தமிழகம் முழுவதும் பரவலாக குடியேறியுள்ளனர். அதனால் அனைத்து மாவட்டங்களிலும் இச்சமூகத்தாரை காணமுடிகிறது. இவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இவர்கள் மிகப்பெரிய அமைப்பாக, அரசியல் சக்தியாக மிளர முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதுக்கும் மேல நான் என்னத்த எழுதறது? வேணும்னா கோவப்படாம தலைப்ப மட்டும் மறுபடியும் ஒருதடவ படிச்சுக்குங்க!

4 comments:

  1. நல்ல பதிவு ... கொம்பு சீவுவதுதான் திட்டமிட்டு நடைபெற்று வருகிறதே ...

    ReplyDelete
  2. சாதி சொல்லி பிரிப்பது

    இது தானா...?!

    ReplyDelete
  3. உன் வேலைய பாரு...

    ReplyDelete
  4. உன் வேலைய பாரு...

    ReplyDelete